வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Image
வாழைப்பூ வடை செய்வது எப்படி புகைப்படத்துடன் கூடிய செய்முறை விளக்கம். கொங்கு மாவட்டங்களில் வடை பருப்பு ரொம்ப பிரசித்தம் ஆனால் மற்ற இடங்களில் வடை பருப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரிய வில்லை. எனவே நான் இங்கு கடலை பருப்பு கொண்டு வடை செய்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்தில வடை பருப்பு கிடைக்குமெனில் அதையே உபயோகிக்கவும். வாழைப்பூவின் மகத்துவத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.   எப்பொழுது இதனை செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை தயார் செய்யும் நேரம்  : 2 மணி நேரம்  சமைக்கும் நேரம் :  15 நிமிடம்    அளவு  :  15 - 18 வடை   தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 1 கப்  (சுத்தம் செய்து நறுக்கியது)  கடலை பருப்பு / வடை பருப்பு  - 3/4 kap சின்ன வெங்காயம் - 1/4 கப் பொடியாய் நறுக்கியது சோம்பு - 3/4 கப்  பெருங்காயம் - 1/4 kap உப்பு - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 -3 பொடியாக நறுக்கியது கருவேப்பில்லை  - 1 கொத்து கொத்தமல்லி இலை - 2 மேஜைகரண்டி  பொடியாக நறுக்கியது செமுறை விளக்...

பன்னீர் அவல்

எப்ப எல்லாம் வீட்டுல பால் மிச்சம் ஆகுதோ அப்பா எல்லாம் அதுல பன்னீர் பண்ணி பிரிட்ஜ் ல சேமிச்சு வெச்சுப்பேன். வீட்டில் பன்னீர் செய்வது எப்படி?. .அந்த பன்னீர் ல இன்னைக்கு பன்னீர் அவல் செஞ்சேன். இப்ப அதை எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.

  
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 1 கப் (துருவியது)
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
அவல் - 2 கப் 
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி தலை - சிறிதளவு 
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி 
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லி தூள் - 1/4 தேக்கரண்டி 
மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி 
ஜீரகம் - 1 தேக்கரண்டி 
எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

1. வெங்காயம்,தக்காளி,கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பன்னீர்த்துண்டுகளை பொடித்தோ அல்லது துருவியோ வைத்துக் கொள்ளவும்.

2. அவல்- ஐ தண்ணீரில் நன்கு அலசிக்கொள்ளவும். லேசான அவல் என்றால் மூன்று முறை அலசினால் போதுமானது. ஊற வைக்கத் தேவை இல்லை. கெட்டியான அவல் என்றால் அலசி பின்பு தண்ணீர் ஊற்றி ஒரு மூன்று  நிமிடம் ஊறவைத்து தண்ணீரை வடிகட்டிக் வைத்துக் கொள்ளவும். அதிகம் ஊறினால் அவல் நச நசவென்று ஆகிவிடும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஜீரகம் போடவும். ஜீரகம் பொரிந்ததும் பச்சை மிளகாய், வெங்காயம்,கருவேப்பில்லை சேர்த்து நன்கு வதக்கவும்.

4. வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின் தக்காளி சேர்த்து மிதமான சூட்டில் மூன்று நிமிடம் நன்கு வதக்கவும்.
5. இப்பொழுது பன்னீர் சேர்க்கவும்.

6. பின் மஞ்சள் தூள்,மிளகாய் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

7. அதனுடன் ஊறிய அவலை சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும்.
8. பின் எலுமிச்சை சாறு மற்றும் கொத்துமல்லி சேர்த்து கிளறினால் சுவையான பன்னீர் அவல் தயார்.




Comments

Popular posts from this blog

அதிரசம் / இடி கச்சாயம் - Adhirasam / idi kachayam in tamil

எலுமிச்சை ஊறுகாய் - lemon pickle / traditional lemon pickle in tamil

புடலங்காய் கூட்டு | pudalangai kootu recipe in tamil | Snake gourd kootu in tamil